“நான் உண்மையைத் தான் சொன்னேன், அதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன்” என்று இன்று (12) காலை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க எம்பி தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டு பொலிஸாரால் அழைத்து செல்லப்படும் போது இதனை தெரிவித்தார். மேலும்,
“பிள்ளையான் விடுவிக்கப்பட்டுள்ளார். நான் சிறைக்கு அனுப்பட்டுள்ளேன். நான் பணத்தை திருடவோ போதை மருந்து விற்கவோ இல்லை.” எனவும் குறிப்பிட்டார்.