( மினுவாங்கொடை நிருபர் )
வெலிக்கடை, மெகஸின் உள்ளிட்ட சிறைச்சாலைகளில் இருக்கும்
கைதிகளான எம்.பி.க்களை, பாராளுமன்ற சபைக்குள் அழைத்து வராமல் இருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், ஆளும் கட்சியின் எம்.பி.க்களான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன்,
பிரேமலால் ஜயசேகர மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.யான
ரிஷாட் பதியுதீன் ஆகிய மூவரையும் சபைக்குள் அழைத்து வராமல் இருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது,
சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளமையால், இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
( ஐ. ஏ. காதிர் கான் )